தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,997 பேருக்கு கொரோனா உறுதி; 33 பேர் பலி – அரசு தகவல் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் புதிதாக 1997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினசரி பாதிப்புகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் அமலுக்கு வந்தது. கடந்த சில வாரங்களாக பாதிப்புகள் குறைந்து வந்தது. இதனால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு – முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்!
அதன்படி, இன்று ஒரு நாளில் 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,164பேர் ஆண்கள், 833பேர் பெண்கள் ஆவர். இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,69,398 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 34,230ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 28 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது வரை, 20,138 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவே 1,943பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,15,030ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.18கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும்,. 4.26 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.