தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் ரூ.50000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர்/அட்டெண்டர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, தேர்வு செயல் முறை, தகுதி விவரம் என அனைத்து தகவல்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர்/அட்டெண்டர் |
பணியிடங்கள் | 15 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன காலிப்பணியிடங்கள் :
- அலுவலக உதவியாளர் – 2
- பதிவு எழுத்தர்/அட்டெண்டர் – 13
Record Clerk/ Attender தகுதி விவரங்கள் :
- காலியிடங்களின் எண்ணிக்கை : 2
- ஊதிய அளவு : ரூ.15900-50400/-
- கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- வயது வரம்பு (1.1.2022 இன் படி): விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் தகுதி விவரங்கள் :
- காலியிடங்களின் எண்ணிக்கை :13
- ஊதிய அளவு : ரூ.15700-50000/-
கல்வி தகுதி:
- ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து III அல்லது VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் வேலை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
- சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு (1.1.2022 இன் படி): விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
விண்ணப்பிக்கும் முறை :
பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்கள் (http://tnwc.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்) கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகள், சமூகம், அனுபவம் போன்றவற்றுக்கு ஆதரவாக தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் (சுய சான்றொப்பம் செய்யப்பட்டவை) முறையாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பொது மேலாளர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழகம், 82, அண்ணா சாலை, கிண்டி, சென்னை – 600 032 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 20.01.2022 மாலை 5.45 அல்லது அதற்கு முன் சென்றடைய வேண்டும். 20.01.2022 கடைசித் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.