TNUSRB 9831 கான்ஸ்டபிள், 1200 தீயணைப்பு காவலர்கள் தேர்வு – பணி நியமன ஆணை வழங்கல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
காவல்துறை பணி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு காவலர்கள் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான பணி ஆணைகளை தமிழக முதல்வர் இன்று வழங்கினார்.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் தெரிவித்தாவது, காவல்துறை என்பது குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தருவதற்காகவும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதில், இரண்டாம் நிலை காவலர் பணியிடத்தில் 9831 நபர்களும், தீயணைப்பு காவலர் பணியிடத்தில் 1200 நபர்களும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர் பணியிடத்தில் 119 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் 2948 பெண் காவலர்கள் மற்றும் 3 திருநங்கைகளும் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் கடந்த வாரம் காவல்துறையில் உள்ள காவல் சார்பு ஆய்வாளர் பணியிடத்தில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுக்கு தேர்வர்கள் தங்களை சிறப்பான முறையில் தயார்படுத்தி வருகின்றனர்.