தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 10,150 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறையானது முடிவு செய்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அன்றைய நாள் வாக்களிக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்கள். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவையும் ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை ஏப்ரல் 18ம் தேதி தங்களது ஊர்களுக்கு செல்ல 20,000-க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழகம் முழுவதும் பதிவு செய்துள்ளார்கள். அதுமட்டுமின்றி ஏப்ரல் 21ம் தேதி தங்களது இருப்பிடத்திற்கு திரும்ப 17,000 நபர்களும் tnstc செயலி மற்றும் www.tnstc.in இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளார்கள் என தமிழக போக்குவரத்துக் கழகமானது கூறியுள்ளது.
TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய தகவல்!
இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துக் கழகமானது ஏப்ரல் 17 மற்றும் 18ம் தேதி சென்னையில் இருந்து 2,092 பேருந்துகளையும், 2,970 சிறப்புப் பேருந்துகளையும், பிற ஊர்களிலிருந்து 3,060 சிறப்பு பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளது. மேலும் தேர்தலுக்குப் பின் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதிகளில் வழக்கமான பேருந்துகளுடன் 1,825 சிறப்புப் பேருந்துகளையும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகளையும் இயக்க உள்ளது. எனவே மொத்தமாக 4 நாட்களுக்கும் சேர்த்து 10,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.