தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (PWD) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technician Apprentice Trainee மற்றும் Graduate Apprentice Trainee பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு படித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை குறித்த விவரங்கள் கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TN PWD வேலைவாய்ப்பு விவரங்கள் :
- பொதுப்பணித்துறையில் Technician Apprentice Trainee மற்றும் Graduate Apprentice Trainee பணிக்கு சமீபத்தில் 500 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம்.
- மேலும் 2019, 2020 மற்றும் 2021 ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிக்கு Apprenticeship விதிகளின் படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மிகாமல் இருப்பது கட்டாயம்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு Graduate Apprentice Trainee பணிக்கு ரூ.9000/- மற்றும் Technician Apprentice Trainee பணிக்கு ரூ.8000/- என மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
TN PWD விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு தகுதியானவர்கள் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் வழியாக தங்கள் விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.01.2022 அன்றைய தினத்துடன் கால அவகாசம் முடியும் நிலையில், தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 25.01.2022 இருந்து 31.01.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.