TNPSC 193 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு – முழு விவரங்களுடன்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது தடுப்பூசி கிடங்கு ஊழியர் உட்பட பல்வேறு பணிகளுக்கான தேர்வினை தற்போது ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்து உள்ளது. தேர்வர்கள் அது குறித்த முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TNPSC தேர்வு ஒத்திவைப்பு:
TNPSC தேர்வாணையம் ஆனது தடுப்பூசி கிடங்கு ஊழியர் உட்பட பல்வேறு பணிகளுக்கு முன்னதாக பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 193 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமைவிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி நாளை (ஜன.06) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கும், வரும் 09.01.2022 அன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கும் அமாலிற்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தேர்வுகள் ஜனவரி 09ம் தேதி அரசு போட்டி தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
அதற்கான மாற்று தேதிகள் நாளை (ஜன.06) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும், எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.