அரசு பள்ளிகளுக்கு ஜனவரி 15ம் தேதி வரை விடுமுறை – உத்தரவு பிறப்பிப்பு!
கோவிட் வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஜனவரி 15 ஆம் தேதி வரை பள்ளிகளை மூடுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. நகரத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பல முக்கிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வருவதாலும், நேரடியாக பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாலும் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் விரைவில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித (TNPL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஜன.20ம் தேதி கடைசி நாள்!
நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் கல்வி நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கினாலும், தொடர்ந்து குழப்பங்கள் எழுந்துள்ளது. இதனால் மாநிலத்தில் அரசு பள்ளிகளுக்கு ஜனவரி 15ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – முழு விபரங்கள் இதோ!
நகரத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை எடுக்க பெற்றோர்கள் தனியார் ஆசிரியர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். ஆன்லைன் கற்பித்தலை ஊக்குவிக்க அரசு அறிவுறுத்தல்களையும் வழங்கியது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் மாணவர்களுக்கு தடுப்பூசி இயக்கத்தை தொடங்க பள்ளிகளை அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அதிக பாதிப்புகள் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களையும் அறிவித்து உள்ளது.