TNPSC தேர்வர்களே.. ரெடியா இருங்க.. 2023ல் நிரப்பப்படவுள்ள பம்பர் காலிப்பணியிடங்கள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டு தோறும் பல்வேறு தேர்வுகள், நடைபெற்று அதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதே போல் 2023 ஆம் ஆண்டு நிரப்பப்படவுள்ள பணியிடங்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இப்பதிவில் காணலாம்.
2023ல் நிரப்பப்படவுள்ள பம்பர் காலிப்பணியிடங்கள்:
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு கடந்த 2 வருடங்கள் காணாமல் போனதே என்றே சொல்லலாம். ஏனென்றால், கொரோனா தாக்கம் காரணமாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டு, அதனால் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தன. இந்த தொற்று தாக்கம் குறைந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது குரூப் 1, 2, 2A , 4 போன்ற பல்வேறு தேர்வுகள் அறிவிக்கப்பட்டு 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலியிடங்களுக்கான தேர்வு செயல் முறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த வருடம் முடிய இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால், வருடாந்திர தேர்வு அட்டவணை படி, எக்கச்சக்க பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் 20,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!
Exams Daily Mobile App Download
இதே போல், 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என்பதால், அடுத்த வருட வருடாந்திர தேர்வு அட்டவணை படி, கிட்டத்தட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆவின் போன்ற பல்வேறு நிறுவனங்களின் காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட உள்ளதாக, அரசு முன்னதாக அறிவித்தது. மேலும் இந்த செயல் முறையும் 2023 ஆம் ஆண்டு செயலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.