TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.2 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பொதுப்பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரம்பும் நோக்கில் TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 32 வகையான போட்டித் தேர்வுகளை நடத்த TNPSC தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. தற்போது குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மே 21ம் தேதி தேர்வு நடைபோடும் என்று மார்ச் 31ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
படப்பிடிப்பு போக மீதிநேரத்தில் IT கம்பெனியில் பணியாற்றும் கண்ணம்மா – ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!
அதனை தொடர்ந்து நடப்பாண்டு குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பொதுப் பணியில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது. நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பணிகளில் 29 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
மேலும் விண்ணப்பதாரர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி முதல் தாள் 28.05.2022 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இரண்டாம் தாள் 28.05.2022 அன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும். தேர்வின் வினாக்கள் 10ம் வகுப்பு பாட தரத்தில் இருக்கும். விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் வாயிலாக பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும்.