TNPSC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ரூ.2,05,700/- சம்பளம் | நாளை இறுதி நாள்!
TNPSC ஆணையத்தில் (Bursar)பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது . இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,05,700/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் 10.12.2022 நாளை என்பதால் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
வேலைவாய்ப்பு விவரம்:
TNPSC ஆணையத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Bursar பதவிக்கு என 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Public Administration பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) Specialization in Finance பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
Bursar பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட 01.07.2022 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 37-க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவை சார்ந்த நபர்களின் அதிகபட்ச வயதானது 32க்குள் இருக்க வேண்டும்.
TNPSC Bursar தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – உடனே பாருங்க…!
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Computer Based Test / Interview and Records மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். Bursar பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ .2,05,700/- வரை ஊதியமாக வழங்கப்படும் .
TNPSC தேர்வு கட்டணம்:
Registration Fee – ரூ .150/-
Examination Fee – ரூ.100/-
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே உள்ள நேரடி இணைப்பின் மூலம் நாளைக்குள் (10.12.2022) Apply செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.