TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ரூ.1,19,500 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அரசுத் துறையில் காலியாக உள்ள கெமிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிகான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. அதன் பிறகு தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்ததது. இந்த நிலையில் மக்கள் TNPSC தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்து வந்தனர். இதனையடுத்து அண்மையில் TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு – வைரலாகும் தகவலின் உண்மை நிலவரம்!
மேலும் அனைத்து வித பதவிகளுக்குமான போட்டித்தேர்வுகளிலும் தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளை தொடர்ந்து கெமிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கெமிஸ்ட் பணியில் 3 காலியிடங்கள் உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது கெமிக்கல் டெக்னாலஜி அல்லது இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, வேதியியல் நிறுவனத்தின் அசோசியேட் டிப்ளோமா (இந்தியா) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now
மேலும் பகுப்பாய்வு வேதியியல் ஆகிய பாடங்களில் ஆராய்ச்சி பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.37,700 – ரூ.1,19,500வரை வழங்கப்படும். இப்பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளம் மூலம் ஜனவரி 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.