தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு – வைரலாகும் தகவலின் உண்மை நிலவரம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் வரும் ஜன.5ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் பத்திரிகை நியூஸ் கார்டு வெளியாகியுள்ளது. இந்த நியூஸ் கார்டு குறித்து அந்த பத்திரிகை நிறுவன இணையதள பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
ஓய்வு பெறும் வயது:
தமிழக அரசுத் துறைகளில் பெரும்பாலானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஓய்வு பெறும் போது ஒரு செட்டில்மென்ட் தொகை வழங்கப்படும். அவ்வாறு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு இதுவரை பணி ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தினால் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டது.
மாநிலம் முழுவதும் ஜன.4க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு ஆலோசனை!
அதனால் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது அதிகரிக்கப்பட்டது. அதாவது தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஏனென்றால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு வழங்கப்படும் செட்டில்மென்ட் தொகை வழங்கும் அளவிற்கு போதிய நிதி இல்லாதது ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது விரைவில் 58ஆக குறைக்கப்படும் என்று தகவல் வெளியிட்டிருந்தது.
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
அதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த அறிவிப்பு வரும் ஜன.5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் ஒரு பத்திரிக்கையின் நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த குறிப்பிட்ட பத்திரிகை இணையதள பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது இது போலியான நியூஸ் கார்டு என்றும், இது நாங்கள் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவிக்கப்படுகிறது.