தமிழ் வழியில் பயின்று பணியில் சேர்ந்தவர்கள் விவரம் – TNPSC சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
தமிழ் வழியில் பயின்று TNPSC தேர்வாணையம் மூலமாக பணியில் சேர்ந்தவர்களின் விவரத்தை தர வேண்டும் என TNPSC தேர்வாணையத்திற்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழ் வழி ஒதுக்கீடு !!!
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் 20% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசாணை ஆகும். ஆனால் சமீபகாலமாக அந்த ஒதுக்கீடு முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அதனால் இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை ஆனது தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த நடைமுறைகளில் முறைகேடுகள் நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 20% ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடந்தால் தமிழ் வழியில் பயின்றவர்கள் நிலை என்னாவது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு !
மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆனது TNPSC தேர்வாணையத்திற்கு விடுத்துள்ள உத்தரவுகள்:
- தமிழ் வழியில் பயின்று பணியில் சேர்ந்தவர்களின் விவரத்தை தர வேண்டும். இந்த விவரம் கடந்த 5 ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களின் பட்டியலோடு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தொலைதூர கல்வியில் பயின்று பணிக்கு சேர்ந்தவர்களின் விவரத்தை சரியான தகவல்களாக வழங்க வேண்டும்.
- சரியான விவரங்களை தரவில்லை எனில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உட்படுத்த நேரிடும்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |