TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க !
தமிழ்நாடு பொது பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு முடிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பான செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
TNPSC மூலம் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பதவிக்கு என 29 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 28.05.2022 அன்று தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 1293 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த காட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக 22.07.2022 முதல் 01.08.2022 வரை பதிவேற்றம் செய்யலாம். மொத்தம் 272 பேர் இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.