TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – காலிப்பணியிடங்கள், பாடத்திட்டம் குறித்த விவரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வின் பாடத்திட்டம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
குரூப் 4 & VAO:
தமிழகத்தில் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இன்று சென்னையில் குரூப்1 முதன்மை தேர்வு நடந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் இத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் அதிக தேர்வர்கள் எதிர்பார்த்த குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. மார்ச் 31ம் தேதி வரை இத்தேர்வு விண்ணப்பிக்கலாம் என்று மே 21ம் தேதி (சனிக்கிழமை) தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச XI அணி!
இந்த நிலையில் அடுத்த கட்டமாக குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்4&VAO தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 5000 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த குரூப் 4 தேர்வு நடப்பு மாதம் குரூப்4 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்வின் பாடத்திட்டம் தயார் செய்யும் பணி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
அதனை தொடர்ந்து TNPSC தேர்வு வினாத்தாள்கள் தேர்வு முன் வெளியாகுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் யாருடையது என்பதை கணினி மூலம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள் எடுத்து வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அரசு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.