TNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வினை , செப்டம்பர் 1ம் தேதி நடத்த உள்ளது . இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் . இதற்கான நுழைவு சீட்டு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது.
TNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை :
- தேர்வர்கள் எடுத்து செல்ல வேண்டியவற்றில் முதன்மையானது நுழைவுச்சீட்டு ஆகும். நுழைவுச்சீட்டு இல்லாத வேட்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.
- தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட பேனாக்களையே உபயோகப்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாவோ அல்லது இதர பென்சில் போன்ற உபகாரணங்களையோ எடுத்து செல்வது தவறாகும்.
- கால்குலேட்டர் செல் போன் போன்ற மின்னணு உபகரணங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- துண்டுத்தாள்களையோ புத்தகங்களையே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.