TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தேர்வாணைய தலைவர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு நடத்தப்படும் TNPSC தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் இனி நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் அரசு துறையில் காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படும் TNPSC தேர்வுகள் கொரோனா தாக்கத்தால் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை. இதனால் அரசு பணிக்கு செல்ல திட்டமிட்டிருந்தோர், தேர்வுக்கு தயாராகியோர் அதிருப்தி அடைந்தனர். 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை தேடி வந்தனர். மேலும் TNPSC தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யுமாறும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டது.
சென்னையில் ஊரடங்கு அமல் எதிரொலி – புகைபிடிப்பதை கைவிட்ட 15% பேர்! ஆய்வில் தகவல்!
அதன்படி மே 21ம் தேதி குரூப் 2, 2A தேர்வு நடைபெறும் என்றும் அடுத்தகட்ட முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வின் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் இந்த முறை நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது தேர்வாணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வில் விடைத்தாளில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. அதனால் இந்த முறை எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வண்ணம் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கணினி மூலம் மட்டுமே மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படும் வினாத்தாள் கொண்டு செல்லும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் தயார் செய்யும் பணிகள் முடிவடைய உள்ளது. விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.