TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – 1,000+ VAO காலிப்பணியிடங்கள்! அறிவிப்பு விரைவில்!
தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட VAO காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
VAO காலிப்பணியிடம்:
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அரசுத்தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைகளின் முடிவாக பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் மூலம் VAO, குரூப் I முதல் V வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் குரூப் – IV மற்றும் VAO தேர்வுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நவம்பர் மாத மின்கட்டணம் செலுத்தாதோர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்!
ஏனெனில் இந்த இரண்டு தேர்வுகளும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது. மேலும் இந்த தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு தேர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதனாலேயே இந்த தேர்வில் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் TNPSC தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றால் எந்தவித தேர்வுகளும் நடத்தப்படவில்லை.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
இந்நிலையில் தற்போது TNPSC தேர்வாணையத்தின் கடந்த ஆண்டு கால அட்டவணைப்படி குரூப் 2 மற்றும் குரூப் 4, VAO தேர்வுகள் நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை அரசு எடுத்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 1,436 VAO காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குரூப் 4 மற்றும் VAO தேர்வு மொழிப்பாடங்களுக்கான பாடக்குறிப்புகள் TNPSC தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை அனைவரும் தெரிந்துகொண்டு அதன்படி தேர்வுக்கு தயாராகுமாறு தெரிவிக்கப்படுகிறது.