தமிழகத்தில் நவம்பர் மாத மின்கட்டணம் செலுத்தாதோர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்!
உடுமலை மின் கோட்டம் வாளவாடி பிரிவுக்கு உட்பட்ட பூதிநத்தம், பள்ளபாளையம் பகிர்மான மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களால் மின் கட்டணம் கணக்கிட முடியவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் தங்களின் செப்டம்பர் மாத மின் கட்டணத்தை நவம்பர் மாதத்திற்கும் செலுத்துமாறு உடுமலை மின் பகிர்மான வட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண வழிமுறை
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மின் கட்டணம் அனைவரது வீடுகளுக்கு சென்று கணக்கிட இயலவில்லை. அதனால் முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்துமாறு முதல்வர் அறிவித்தார். இதற்கு அடுத்த முறை மின் கணக்கீடு முறையாக கணக்கிடப்பட்டு, இதற்கு முன் செலுத்திய தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதே போல் தற்போது உடுமலை மின் கோட்டத்தில் உள்ள பூதிநத்தம் பகுதியில் மின் இணைப்புகளுக்கான வேலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழகத்தில் நாளை (நவ.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதனால் மின் வாரியம் மின் நுகர்வோரின் வீடுகளுக்கு சென்று முறையாக கணக்கீடு செய்ய முடியவில்லை. அதனால் அங்குள்ள மக்களுக்கு சென்ற மாதம் செலுத்திய மின் கட்டண தொகையை இந்த மாதத்திற்கும் செலுத்துமாறு உடுமலை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அனைத்து மின் இணைப்பு வேலைகள் முடிந்த பிறகு அனைவரது வீடுகளுக்கும் சென்று மின்கட்டண கணக்கீடு மேற்கொள்ளப்படும்.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தரிசனத்திற்கு 6 மாதத்திற்குள் முன்பதிவு அவசியம்!
அதன் பின் தங்கள் செலுத்தி இருந்த தொகையில் இருந்து கழித்து கொள்ளப்பட்டு மீதமுள்ள தொகை வசூலிக்கப்படும். இவ்வாறு மாதம் ஒரு முறை மின் கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்ற தமிழ்நாடு அரசின் வாக்குறுதி கண்டிப்பாக பின்பற்றப்படும். இதனால் மக்கள் அச்சமின்றி செப்டம்பர் மாதம் செலுத்திய மின்கட்டணத்தை நவம்பர் மாதத்துக்கும் விரைந்து செலுத்துமாறு உடுமலை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.