TNPSC குரூப் 4 தேர்வு மையம் அதிரடி மாற்றம் – தேர்வாணையம் உத்தரவு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய முழு அறிவிப்பை இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.
TNPSC குரூப் 4 தேர்வு மையம் அதிரடி மாற்றம்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 072022, நாள் 30.03.2022-ன் வாயிலாக நேரடி நியமன த்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி -I V) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 24.07.2022 முற்பகலில் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
கள்ளக்குறிச்சி மாவட்டம் & வட்டத்தில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிர்வாகக் காரணங்களினால், தேர்வு மையங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு பதிலாக 24.07.2022 அன்று AKT Academy Matric Hr. Sec., School, Neelamangalam, Kallakurichi Taluk. மற்றும் AKT Memorial Vidya Saaket School (CBSE), Neelamangalam, Kallakurichi Taluk ஆகிய பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விண்ணப்பதாரர்களுக்கான மாற்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விவரம், தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி விண்ணப்பதாரர்கள் மாற்று தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை தேர்வாணைய இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுமையத்தில் தேர்வு எழுதுமாறு TNPSC அறிவித்துள்ளது.