TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? கட்-ஆஃப் என்ன? முழு விவரம் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
TNPSC குரூப் 4 தேர்வு:
TNPSC சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வானது கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு 7301 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்த தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினார்கள்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது வரை இந்த தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதனால் தேர்வர்கள் எப்போது முடிவுகள் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
இந்திய விமான படையில் 240+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Follow our Instagram for more Latest Updates
TNPSC குரூப் 4 கட்-ஆஃப்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை, எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்-ஆஃப் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன. குரூப் 4 கட்-ஆஃப் பட்டியலில் தகுதி பெற்று குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அதாவது 90 மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமே கவுன்சிலிங் வரவழைக்கப்பட்டு பின் ஆவண சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.