TNPSC குரூப் 4 & VAO தேர்வு முடிவுகள் – எப்போது வெளியாகும்? முக்கிய தகவல் இதோ!
தமிழகத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது
TNPSC குரூப் 4 முடிவுகள்:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. சுமார் 7,138 குரூப் 4 பதவிகளுக்கான இத்தேர்வுக்கு சுமார் 18.5 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த ஆண்டு தேர்வாணையத்தின் அறிவிப்பு படி முதல் பகுதி தமிழ்மொழித் தேர்வு வினாக்கள் இடம்பெற்றது.
மேலும் தமிழ் மொழி பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பொது அறிவு கேள்விகள் எதிர்பாராத விதமாக கடினமாக இருந்ததாகவும் பதிலளிக்க சிரமமாக இருந்ததாகவும் கூறினர். இந்த தேர்வு முடிவடைந்ததை அடுத்து உத்தேச விடை குறிப்பு வெளியானது. அத்துடன் விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த கணிப்புகள் வெளியாகி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – தீபாவளியை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலில் ஆகஸ்ட் மாதம் குரூப் 4& VAO தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. அதன் பிறகு நடப்பு மாதமான அக்டோபரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியாக டிசம்பர் மாதம் குரூப் 4& VAO தேர்வு முடிவுகள் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. தற்போது டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு கட் ஆப் எவ்வளவு இருக்கும் என்று அறிந்து கொள்ளவும் தேர்வர்கள் ஆர்வமாக உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்