TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – போட்டித்தேர்வுகள் நடைபெறுமா? ஊரடங்கு எதிரொலி!
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு நடத்தப்படும் TNPSC குரூப் தேர்வுகள் குறித்த அறிவிய அண்மையில் வெளியானது. இந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் பாதிப்புகளால் ஊரடங்கு விதிக்கப்பட்டு வருவதால் இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெறுமா? என்று தேர்வர்கள் அச்சத்தில் உள்ளனர்.
TNPSC தேர்வுகள்:
தமிழ்நாட்டில் அரசு துறை பணியிடங்களுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பு வருகிறது. இதனால் TNPSC தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வுகள் ஒத்திவைப்பு? அமைச்சர் விளக்கம்!
இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அண்மையில் TNPSC தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதில் 2022ம் ஆண்டு 22 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்தது. மேலும் முதல் கட்டமாக குரூப் 4, 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட பாடத்திட்டம் மற்றும் புதிய விதிமுறைகள் குறித்து TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
இந்த நேரத்தில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நாளை முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்கள் மூடப்பட்டுள்ளது, உணவகங்கள், திரையரங்குகள் போன்றவற்றில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தால் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. அதனால் இந்த வருடம் அறிவிக்கப்பட்டபடி போட்டித் தேர்வுகள் நடைபெறுமா? என்று தேர்வர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடமாவது அரசு வேலை வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் படித்து வரும் தேர்வர்கள் வருத்தத்தில் உள்ளனர்.