TNPSC குரூப் 2, 2A தேர்வில் 5831 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – பதவிகள், கல்வித்தகுதி!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Group 2 & 2A தேர்வு மூலம் 5,831 காலிப்பணியிடங்கள் நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் இந்த தேர்வுக்கான பதவிகள் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
TNPSC Group 2 & 2A:
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வாணையம் Group 2 & 2A தேர்வின் மூலம் 5,831 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற திட்ட அறிக்கையை TNPSC தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார். அதனால் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் Group 2 & 2A தேர்விற்கான பதவி மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – வாய்ஸ் ரெக்கார்டுகளை அனுப்புவதற்கு முன் சோதிக்கும் முறை!
இந்த குரூப் 2 தேர்வானது முதல்நிலை தேர்வு (Preliminary Exam), முதன்மை தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) மூலம் பணி தெரிவு செய்யப்படுகிறது. இந்த குரூப் 2 தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளும் நேர்முகத்தேர்வின் கீழ் தெரிவு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் ஜன.3 முதல் மாற்றம் – முக்கிய கோரிக்கை!
அதே போல் குரூப் 2A தேர்வு மூலம் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் TNPSC ல் எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் நிரப்படும். குரூப் 2 & 2A தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க மட்டும் பட்டப்படிப்புடன் தட்டச்சு முடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.