தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் ஜன.3 முதல் மாற்றம் – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் 6 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை கைவிட்டு 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் தினசரி வகுப்புகளை நடத்த உத்தரவிட்டு உள்ள நிலையில் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
தினசரி வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு அரசின் நோய்த்தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது. 2021 – 2022ம் கல்வியாண்டில் அரசின் நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கூறுகின்றனர். எனவே விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்து வருகிறது.
Post Office பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் அம்சங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!
மேலும் நடப்பாண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2022 ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு தினசரி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் தேவை அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.28 கடைசிநாள்!
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், நேரடி வகுப்பு துவங்கினால் கற்றல் – கற்பித்தலில் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் கட்டாய நேரடி வகுப்பு நடத்த வேண்டும். மற்றவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கு தற்போது வரை ஆசிரியர்கள் இல்லை இதற்காக கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு நிதி விடுவித்து பணிகள் துவங்க, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதனை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.