TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் 2021 – விரைவில் வெளியீடு! தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து பிரதான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC:
தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் துறைகள் மற்றும் அதற்கு தேவையான கல்வித் தகுதியை பொறுத்து குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பட்டால் நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதனால் அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளையும் அளித்து வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை!
அதனால் விரைவில் அரசு பணிக்கான போட்டித் தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துணை ஆட்சியர் , டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகிய பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 1 தேர்வின் புதிய முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் TNPSC குரூப் 1 தேர்வு நடைபெற்றது.
TNPSC Coaching Center Join Now
அத்தேர்வின் முடிவுகள் பிப்ரவரி மாதமே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான அரசாணையில் சில திருத்தம் செய்யப்பட்டதால் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு புதிய முடிவுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரதான தேர்வு நடைபெறும் நாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.