TNPSC குரூப் 1 தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு – தேர்வுக்கான விதிமுறைகள் இதோ!
தமிழகத்தில் TNPSC மூலமாக 92 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று (நவம்பர் 19) 38 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகள்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் குரூப் 1 தேர்வில் துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என 92 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதற்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று ( நவம்பர் 19) நடைபெற இருக்கிறது. இந்த பணிகளை நிரப்ப அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த தேர்வுக்கு 3, 22,414 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இந்த தேர்வானது 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் நடைபெற இருக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் 38 மையங்களில் இந்த தேர்வு காலை 9.30 மணி அளவில் தொடங்க இருக்கிறது.
மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புது விதிமுறையாக தேர்வர்கள் மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் 9 மணிக்குள் கட்டாயம் வர வேண்டும் இல்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.