இனியாவை அழைத்து வர சொல்லும் ஈஸ்வரி.. ராமமூர்த்தி எடுத்த திடீர் முடிவு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா இல்லமால் வீட்டில் அனைவரும் வருத்தத்துடன் இருக்கின்றனர். ஈஸ்வரி இனியாவை அழைத்து வர சொல்ல ஆனால் அவளுடைய தவறை அவள் உணரமாட்டாள் என்பதால் பாக்கியா வேண்டாம் என சொல்கிறார். உடனே தாத்தா இனியாவுடன் தங்க முடிவு செய்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா கோபி உடன் சென்றுவிட்டதால் பாக்கியா இனியாவை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது எழில் வந்து பாக்கியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். நாம திட்டியதால் அங்கே போனால், நாளை அங்கே திட்டினால் இங்கே வருவாளா என்ன புள்ள என கேட்டு வருத்தப்பட, எழில் அவள் கண்டிப்பாக வருவாள் என சொல்கிறார். மறுநாள் இனியா தூங்கி எழுந்திரிக்க கோபியை காணாமல் தேடுகிறார். அப்போது ராதிகா உன் அப்பா வாக்கிங் சென்று இருப்பதாக சொல்கிறார். ராதிகா இனியா படுத்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்கிறார். மயூரா எழுந்து வர இனியா எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் ராதிகா இனியாவிற்கு காபி கொடுக்கிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இனியாவும் வேறு வழியில்லாமல் குடிக்கிறார். அப்போது கோபி வர, இனியா இது காபி என சொல்கிறார். உடனே கோபி ராதிகாவை அழைத்து இனியா பால் தான் குடிப்பாள் என சொல்கிறார். உடனே ராதிகா பால் கொண்டு வருகிறார். இனியா சோகமாக இருக்க கோபி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என கேட்கிறார். அப்போது இனியா நான் வீட்டிற்கு போக வேண்டும் என சொல்ல, ஏன் இங்கே இருக்க என்ன பிரச்சனை என கோபி கேட்கிறார். இனியா அம்மா பாவம் என சொல்ல, அவளுக்கு எல்லாரும் இருக்காங்க என கோபி சொல்ல, அம்மா நான் இல்லாமல் கஷ்டப்படுவாங்க என இனியா சொல்கிறார். உடனே கோபி நீ அங்கே போனாலும் உன்னை திட்டுவார்கள். நீ இங்கே இரு நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்
மறுபக்கம் செல்வி வர பாப்பா வந்துவிட்டாளா என கேட்கிறார். ஜெனி இல்லை என சொல்ல, ஈஸ்வரி செழியன் எழில் இரண்டு பேரும் சீக்கரம் வாங்க என கூப்பிடுகிறார். அப்போது ஈஸ்வரி இனியா அங்கே இருந்தது போதும் சென்று கூட்டிக் கொண்டு வாருங்கள் என சொல்கிறார். உடனே பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். ஏன் என ஈஸ்வரி கேட்க, அவளுடைய இஷ்டத்துக்கு தான போனாள் அதனால் அவளே வரட்டும் என சொல்கிறார். பின் ஈஸ்வரி அவளை அங்கே யார் பார்த்துக் கொள்வார் என கேட்க, உடனே பாக்கியா அவளை இப்போது கூட்டிக் கொண்டு வந்தால் அவள் செய்த தவறு புரியாமல் போய்விடும் என சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு ராமமூர்த்தி திடீர் முடிவு ஒன்றை எடுக்கிறார்.
அவர் கிளம்பி பை உடன் வர ஈஸ்வரி எங்கே கிளம்பிடீங்க என கேட்கிறார். உடனே ராமமூர்த்தி நான் கோபி வீட்டிற்கு போகிறேன். இனியாவை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இனியா போனதையே எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை நீங்க வேற ஏன் இப்படி செய்கிறீர்கள் என ஜெனி கேட்க, இனியா செய்த தவறை நான் புரிய வைக்கிறேன் என சொல்கிறார். பின் பாக்கியா வேண்டாம் என சொல்ல, ஆனால் ராமமூர்த்தி அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். பின் ராதிகா வீட்டிற்கு ராமமூர்த்தி சென்று இனியாவை அழைக்கிறார். அப்போது கோபி இனியாவை அழைத்து செல்ல வந்திருக்கீங்களா என கேட்க, இல்லை நானும் இனியா உடன் தங்க வந்திருக்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைய, ராதிகா கோபியை முறைத்துவிட்டு செல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.