TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு? காரணம் என்ன? – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் TNPSC ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு ஜன.6,7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
தமிழகத்தில் கடந்த மாதம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை பாதிப்பில் இருந்து படிப்படியாக மக்கள் மீண்டு வருவதால் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால், ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட இளைஞர்கள் தேர்வுக்குத் தயாராக முறையான வாய்ப்பு வழங்க வேண்டும் என அரசிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்து இருக்கிறார்.