TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாள்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது TNPSCயின் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்குடன் ஆதார் விவரங்களை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு
தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக நிரப்பப்படுகிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையை அண்மையில் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2 க்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த வாரம் TNPSCயின் தலைவர் அறிவித்தார்.
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்த ஆண்டுக்கான குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 23ம் தேதிக்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும். அதனால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்து கொண்டிருக்கின்றனர். தற்போது TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தமிழ்நாடு 2வது இடம்!
இதனை தொடர்ந்து TNPSCயின் நிரந்தர பதிவு எண் வைத்திருப்பவர்கள் கட்டாயமான முறையில் தங்களின் ஆதார் குறித்த விவரங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் இணைந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில் மேலும் சில கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் எண்ணை இணைக்க வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் குரூப் 2,2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் வருகிற மார்ச் 23ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.