TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் தொகுத்தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
PG TRB:
தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளை திறப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. நீண்ட ஒரு வருடத்திற்கும் மேலாக வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. கொரோனா அச்சுறுத்ததால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தி படிக்க வைக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் 2021 – 2022 ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.
மார்ச் 1ம் தேதியன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவியது. குறிப்பாக அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப போதிய ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அதனால் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விண்ணப்பதிவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் தேர்வு நடைபெற தொடங்கியது.
தமிழகத்தில் எல்.கே.ஜி வகுப்புகள் மூடல் – பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்! கல்வித்துறை திட்டம்!
சுமார் 190 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அதில் 2.30 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். பிப்ரவரி 20ம் தேதியுடன் முதுகலை பட்டதாரி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தேர்வுக்கான விடைகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வின் முடிவுகளும் விரைவில் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச் மாதத்திற்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.