TNPSC கணக்கு பதிவியலாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு – Oral Testக்கு அழைப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள கணக்குப்பதிவியல் அதிகாரி Class III பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வை கடந்த ஆண்டு நடத்தியது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள கணக்குப்பதிவியல் அதிகாரி Class III பணியிடத்தில் காலியாக இருக்கும் 23 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இப்பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி அன்று காலை Paper – I தேர்வும், பிற்பகலில் Paper – II தேர்வும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் தொடக்கம் – ஆசிரியர்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!
இத்தேர்வை Institute of Chartered Accountants / Cost Accountants நிறுவனத்தில் நடத்தப்பட்ட இறுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும். தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக Oral Testக்கு அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
இத்தேர்வுக்கான முடிவுகளை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தியும் அல்லது TNPSC தேர்வு வாரியத்தின் இணையதளத்தை பயன்படுத்தியும் தங்களின் தேர்வு முடிவுகளை பெறலாம்.