தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பணியிடம் காலியாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே 25.04.2022 (நாளை) அன்றுக்குள் விண்ணப்பித்து பயனடைய ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
TNHRCE Tirupur அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பணிக்கு என 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
- Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது என்றும் அதிகபட்சம் 32 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
- SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் MBC / DNC / BC பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டு உள்ளது.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ஊதிய நிலை 1-ன் படி குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து, கொடுக்கப்பட்டுள்ள தபால் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளான (25.04.2022) நாளைக்குள் வந்து சேரும் படி அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம்.