தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்ட அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர் மற்றும் பரிச்சாரகர் பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | அர்ச்சகர் மற்றும் பரிச்சாரகர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அர்ச்சகர் மற்றும் பரிச்சாரகர் பணிகளுக்கு தலா ஒரு காலிப் பணியிடம் என மொத்தம் 02 பணியிடங்கள் நிரப்புவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
TN Job “FB Group” Join Now
TNHRCE கல்வித் தகுதி:
இந்த பணிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பது அவசியம்.
TNHRCE வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2022 அன்றின்படி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பவரும் விண்ணப்பிக்க தகுதி நிறைந்தவர்.
TNHRCE ஊதிய விவரம் :
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம், அர்ச்சகர் பணிக்கு ரூ.15,300/- மற்றும் பரிச்சாரகர் பணிக்கு ரூ.13,200/- வழங்கப்படும்.
TNHRCE தேர்வு முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN’s Best TNPSC Coaching Center
அறநிலையத்துறை விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாளையுடன் கால அவகாசம் முடிவதால் விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை விரைந்து செய்து பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.