தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.39,900/- மாத ஊதியத்தில் வேலை!
செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ஓதுவார் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பில், திருப்போரூர் மாவட்ட அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் காலியாக உள்ள ஓதுவார் பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஓதுவார் பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- ஓதுவார் பணிக்கு அரசு அல்லது சமய நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற தேவார பள்ளிகளில் குறைந்தது 3 வருடங்கள் படித்ததற்கான சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix 13 / 1 என்ற ஊதிய அளவின் படி, ரூ.12,600/- முதல் ரூ.39,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்