தமிழக மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு – முன்கூட்டியே செலுத்தினால் வட்டி விகிதம்!

0
தமிழக மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு - முன்கூட்டியே செலுத்தினால் வட்டி விகிதம்!
தமிழக மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு - முன்கூட்டியே செலுத்தினால் வட்டி விகிதம்!
தமிழக மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு – முன்கூட்டியே செலுத்தினால் வட்டி விகிதம்!

தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக மின் கட்டணம் செலுத்த இயலாதவர்கள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு வட்டியையும் மின்வாரியம் வழங்குகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்துள்ளது.

மின் கட்டணம்

தமிழகத்தில் அனைவருக்கும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் வழங்கி வருகிறது. இதில் பல்வேறு துறையினருக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் மாறுபடுகிறது. அதாவது விவசாயத்திற்காக வழங்கப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அத்துடன் தொழில்துறை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு குறைந்த அளவிலான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்சார அளவு கணக்கிடப்பட்டு மின்வாரியத்தால் வசூலிக்கப்படுகிறது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விதிமுறைகளில் மாற்றம்!

கொரோனா கால கட்டத்தில் நேரடியாக வீடுகளுக்கு சென்று மின்சார அளவை கணக்கிட முடியாததால் தங்களின் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். அத்துடன் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் அனைத்து துறைகளும் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. அந்த வகையில் மின் கணக்கீடு செய்யப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கால அவகாசத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அபராதத்துடன் சேர்த்து மின்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷிய அதிபர் உறுதி!!!

ஆனால் அந்த நேரத்தில் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் போது மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் அபராத தொகையுடன் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. அதனால் இதனை தவிர்க்கும் வகையில் தற்போது முன் கூட்டியே மின் கட்டணத்தை செலுத்தி கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். இந்த தொகைக்கு ரிசர்வ் வங்கி வைப்பு நிதிகளுக்கு நிர்ணயிக்கும் வட்டியை பொறுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வட்டி நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு 2.7% வட்டியை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!