அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விதிமுறைகளில் மாற்றம்!
இந்தியாவில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் கார்டு விதிகளை விரைவில் மாற்ற உள்ளது. இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய தரநிலை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி, பருப்பு, கோதுமை, மளிகை பொருட்கள், எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை மாதந்தோறும் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் வேலைக்காக இடம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களில் பணிபுரியும் ரேஷன் அட்டைதாரர்கள் மத்திய அரசின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர்.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷிய அதிபர் உறுதி!!!
நாட்டில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்ற 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோக திட்டம் ஏழை மக்களை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும் ரேஷன் கடை மூலமாக மலிவு விலையில் பொருட்களை வாங்கி அவற்றை வேறு இடங்களில் அதிக விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் உணவு வழங்கல் மற்றும் பொது விநியோகத் துறை சார்பாக ரேஷன் கார்டு விதிமுறைகளை மாற்றி அமைத்து வருகிறது. விதிமுறைகளை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் புதிய தரநிலை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பொது விநியோக திட்டத்தின் கீழ் தகுதியவர்கள் மட்டுமே பயன் பெற முடியும் மேலும் இந்த மாற்றங்கள் ரேஷன் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.