TNDTE தமிழகத்தில் மீண்டும் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தேர்வுகள் கனமழை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, தீவிரமடைந்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் மழை காரணமாக, 25 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி, 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வுகள் கனமழை காரணமாக, வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கவனே இந்த தேர்வுகள் புதிய நடைமுறை படி, நடக்க இருப்பதால் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலைமையில் பல நாட்களாக இந்த தேர்வுகள் நடைபெறாமல் இருப்பது, தேர்வர்களை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்றே கூறலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த தேர்வுகளுக்கான GTE தேர்வு ஹால் டிக்கெட்டுகளை விண்ணப்பதாரர்கள் https://tndtegteonline.in/ என்ற இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.