அரசு சட்ட கல்லூரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு !
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கான, எல்.எல்.பி., சட்டப்படிப்புக்கு இன்று முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இது குறித்து செய்து குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திகுறிப்பில் அம்பேத்கர் சட்ட பல்கலையில் உள்ள, சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலையின் இணைப்பில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., மற்றும் இரண்டாண்டு, எல்.எல்.எம்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், எல்.எல்.பி.,க்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் அதனை, அக்., 28க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சட்ட மேற்படிப்பான எல்.எல்.எம்., பாடங்களுக்கு வரும், 7ம் தேதி முதல் நவம்பர், 4க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் கோபோர்ப்பட்டு இருந்தது. பதிவு செய்ய விரும்புவோர் சட்ட பல்கலையின், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் நேரடியாகவும் பெறலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்