தமிழக அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 450 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- TNCSC தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் ஆகிய பணிகளுக்கு தலா 150 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 450 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
- பட்டியல் எழுத்தர் – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிறந்த coaching centre – Join Now
- உதவுபவர் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- காவலர் – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
- உதவுபவர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
- காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 1.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி:-
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
எண்1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சாவூர் – 613001