தமிழகத்தின் இந்த 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – உஷாரா இருங்க மக்களே!!
குமரி கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் டிச.30ம் தேதி வரை லேசானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற இடங்களிலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று (டிச.26) வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இன்று , இராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி , சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை மற்றும் டிச.28, 29, 30 ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உங்கள் EB எண் ஆதாருடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? இந்த வழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்!
Exams Daily Mobile App Download
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் லட்ச தீவு பகுதிகள், தென் தமிழகத்தின் கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் காற்று 60 கி.மீ வரை வீச கூடும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது.