தமிழகத்தில் உயரும் வெப்ப நிலை – தொடரும் வறண்ட வானிலை.. ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

0
தமிழகத்தில் உயரும் வெப்ப நிலை - தொடரும் வறண்ட வானிலை.. ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!
தமிழகத்தில் உயரும் வெப்ப நிலை - தொடரும் வறண்ட வானிலை.. ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!
தமிழகத்தில் உயரும் வெப்ப நிலை – தொடரும் வறண்ட வானிலை.. ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

தமிழகத்தில் பிப். 21 முதல் 25ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

இந்தியாவின் கடந்த மாதம் ஜார்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியது. மேலும் அதிகாலை நேரங்களில் நிலவிய பனி பொழிவின் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

TNDTE தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு மையங்கள் மாற்றம்!

இத்தகைய நேரத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் நடப்பு ஆண்டு வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது. தற்போது குளிர் காலம் முடிவடைந்து வெப்பநிலை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான காலநிலை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில் பிப். 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வெப்ப நிலை அதிகபட்சமாக 33 – 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!