தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் பணி ஓட்டத்திற்கு வாய்ப்பு இருக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது. அத்துடன் குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழையும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் அதிக பனிமூட்டமும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதி, தென்மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் ஜனவரி 12&13 ஆகிய நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.