கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு !!- விஏஓக்கள் சங்க அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து தற்போது தமிழக விஏஓக்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
கொரோனா நிவாரண நிதி :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் தற்போது கடந்த மே 10 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் ஆனது வரும் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000/- கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி அடுத்த ஜூன் மாதத்திற்கான நிவாரண தொகையில் முன் தவணையாக ரூ.2,000/-இந்த மாதமே வழங்கப்பட்டு வருகிறது.
மே 24ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
விஏஓக்கள் சங்க அறிவிப்பு :
இந்த நிவாரணத்திற்கு நிதி வழங்குமாறு முதல்வர் நிவாரண நிதி என வங்கி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. இதில் நிதி அளிக்க விருப்பமுள்ளவர்கள் தாராளமாக நிதி வழங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த நிவாரண திட்டத்திற்கு தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை நிதியாக வழங்க இருப்பதாக தமிழக விஏஓக்கள் சங்கம் அறிவித்து உள்ளது. மேலும் இச்சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் ரா.அருள்ராஜ் அவர்கள் தனது ஒரு மத்திய ஊதியத்தையும் நிதியாக வழங்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
Aarchampatti r t malai pt Karur dt tamilnadu India
Cancer
Archampatty R t malai pt Karur dt tamilnadu India