மே 24ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் மாநிலம் முழுவதும் மே 24ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்திலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளிவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
நேற்று ஒரு நாளில் ஹரியானாவில் 9,676 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலநாட்களுக்கு பிறகு மாநிலத்தில் 10,000 க்கும் குறைவான பதிவுகள் நேற்று பதிவாகி இருந்தது. நேற்று மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் காட்சிகள் உட்பட அனைவரையும் கோவிட் மீதான அரசாங்கத்தின் போராட்டத்தில் சேருமாறு மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் வேண்டுகோள் விடுத்தார்.
TN Job “FB
Group” Join Now
கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அவர் கெடுக்க கொண்டுள்ளார். மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுகள் அதிகம் பரவி வருவதால் ஊரடங்கை மே 24ம் தேஹத்தி வரை நீடிப்பதாக ஹரியானா அமைச்சர் அனில் விஜ், கூறியுள்ளார்.