TN TRB காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முதுநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் வரும் ஜனவரி 29ம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கால அட்டவணை 15 நாட்களுக்கு முன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவலால் ஓராண்டிற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் 2021-2022ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆசிரியர் பற்றாக்குறையால் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் தாமதம் நிலவுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன.இதனால் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பும்படி கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவும் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தேர்வு நடைபெற இருந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. மேலும் தற்போது மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி கட்டாயம்! மாநில அரசு முக்கிய உத்தரவு!
வரும் ஜனவரி 29ம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர்கள் ஆகிய பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு கொரோனா பரவலால் பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12 முதல் 20ம் தேதி வரை முற்பகல் மற்றும் பிற்பகலில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.