தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிட தேர்வு அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்து உள்ளார்.
ஆசிரியர் காலிப்பணியிடம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண கொள்ளை உள்ளிட்ட காரணங்களால் பெற்றோர்களின் கவனம் அரசுப்பள்ளிகளின் மீது திரும்ப தொடங்கி உள்ளது. தனியார் பள்ளிக்கு இணையான ஆசிரியர்கள், வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் இருப்பதால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. நடப்பு கல்வியாண்டில் அதிகளவில் மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
TNUSRB போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவாதம்!!
இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்து உள்ளது. எனவே புதிதாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு அட்டவணையை விரைந்து வெளியிட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
TN Job “FB Group” Join Now
அவர் கூறுகையில், தமிழக அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இம்மாத இறுதிக்குள் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Please reopen school for class 8 only please
BT postings in government aided schools are in pending. We are suffering too much. Please do the favour.