TNUSRB போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவாதம்!!

0
TNUSRB போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவாதம்!!
TNUSRB போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவாதம்!!
TNUSRB போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவாதம்!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) தேர்வில் தமிழ் வழியில் படித்தோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு குறித்து நீதிமன்றத்தில் அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்வழி இடஒதுக்கீடு:

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) என அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சிறப்பு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என ராமேஸ்வரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

TN Job “FB  Group” Join Now

அவரது மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது, 2019ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி TNUSRB எஸ்ஐ பணி தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று படிநிலைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. நான் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்துள்ளேன். அதற்கான PSTM சான்றிதழும் உள்ளது.

நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் – வங்கி ஊழியர்கள் அறிவிப்பு!!

TNUSRB தேர்வு நடைமுறையில் தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. மேலும் TNPSC தேர்வுகளில் அனைத்து படிநிலைகளிலும் தமிழ்வழி ஒதுக்கீட்டை பின்பற்றுவது போன்று எஸ்ஐ தேர்வின் மூன்று படிநிலைகளிலும் பின்பற்றப்பட வேண்டும். மேலும் தற்காலிக தேர்வு பட்டியலை தடை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதில் அரசு தரப்பு வாதத்தில், எஸ்ஐ நேர்காணல் தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

மேலும் இனி வரும் தேர்வுகளில் TNPSC, TRB தேர்வுகளை போன்று போலீஸ் தேர்விலும் தமிழ்வழி ஒதுக்கீடு பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் 20% இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்ஆப் மதிப்பெண்களை பெற்றிருந்தால் அதனை பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!