TN TRB அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
மதுரையில் நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்திருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள பில்லர் மையத்தில் பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான மேம்பாட்டு பயிற்சியை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார். இதில், பேசியுள்ள அமைச்சர் வருகிற 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழகம் கல்வித்துறையில் முதல் இடத்தில் இருக்கும் என்றும் கல்வித்துறை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்லும் வகையில் பல திட்டங்கள் செயல்பாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதுமட்டுமின்றி, பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்கொலை செய்வதும்,தற்கொலைக்கு முயற்சிப்பதும் போன்ற செயல்கள் வருத்தமளிக்கிறது. பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜூலை மாதத்தில் மறு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இதனால் மாணவர்கள் எந்த ஒரு தீமை செயலிலும் ஈடுபடாமல் இந்த மறுதேர்வை எழுதி அடுத்த கட்ட உயர் படிப்பிற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு பல சர்ச்சைகள் இன்றி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு மாறாக மாநிலத்துக்கென கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, பள்ளி கட்டிடங்களில் ஏற்படும் விரிசல்கள், சரியில்லாத கட்டிடங்களை இடித்து புது கட்டிடங்களை கட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் எக்கச்சக்கமான மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி திரண்டு வருகின்றனர். ஆகையால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.