TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் புகார்!
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இத்தேர்வில் ஒரே மாதிரியாக 10 வினாக்கள் இடம் பெற்றுள்ளது என்று புகார்கள் வந்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
தேர்வில் குளறுபடி
தமிழகத்தில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017ம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணியிடத்தில் 1060 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அத்துடன் கொரோனா காலம் என்பதால் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.
மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த இறுதி முடிவு – முதல்வர் மறுஆய்வு!
மேலும் இதற்கு முன் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக 2 முறை இத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்பணியிடத்திற்கு டிசம்பர் 10ம் தேதி வேதியியல் பாடத்திற்கான தேர்வும், டிசம்பர் 12ம் தேதி மின்னணுவியல், தகவல் தொடர்பு பொறியியல் பாடத்திற்கான தேர்வும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வின் விடைக்குறிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் வேதியியல், இசிஇ போன்ற பாடங்களுக்கான தேர்வில் பொது அறிவு பகுதியில் 10 வினாக்கள் ஒரே மாதிரியாக கேட்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் – கலெக்டர் புகார்!
அதனால் இது குறித்து தேர்வர்கள் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார்களை மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளனர். இதில் கூறியதாவது, அரசு பணியிடத்துக்காக நடத்தப்படும் அரசு போட்டி தேர்வுகளில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு மதிப்பெண்ணில் கூட அரசு வேலையை இழக்க நேரிடும். ஆகையால் வினாத்தாள் குளறுபடி தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன் தேர்வர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.